உள்ளூர் செய்திகள்

இளைஞர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா

Published On 2023-09-23 08:03 GMT   |   Update On 2023-09-23 08:03 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வாலாஜாவில் உள்ள அரசினர் ஆதி திராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விமல்குமார், அமுதாமணி, பெல் பொது மேலாளர் சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர் சீனிவாசன்.

விடுதி காப்பாளர் மாலதி உள்பட கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News