உள்ளூர் செய்திகள்

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் ஐம்பெரும் விழா

Published On 2022-12-10 08:55 GMT   |   Update On 2022-12-10 08:55 GMT
  • 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது
  • ஆரோக்யலஷ்மிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது

வாலாஜா:

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18-வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 62-வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா நேற்று தொடங்கி வருகிற 11-ம் தேதி முடிய நடைபெறுகிறது.

விழாவில் முதல் நாளான நேற்று மங்கள இசையுடன் கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, மஹா கணபதி, நட்சத்திர நவக்கிரக பூஜை, ஸ்ரீ தன்வந்திரி, ஏகாதச ருத்ர ஹோமம் உள்பட 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனையுடன் ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் 62 சுமங்கலிகள், 62 கன்னி பெண்கள் பங்கேற்ற சுமங்கலி, கன்யா பூஜைகள் நடைபெற்றது.விழாவில் ஸ்தல வரலாறு நூல் வெளியிடப்பட்டு சாதுக்களுக்கு வஸ்திரம், 5கிலோ அரிசி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர் மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

மாலையில் வாலாஜா ஸ்ரீ நடராஜ பெருமான் நாட்டிய பள்ளி எம்.ஷன்மதி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு.கூனம்பட்டி ஆதினம், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நங்க நல்லூர் காமாட்சி ஸ்வாமிகள், பெலாகுப்பம் ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் ஸ்வாமிகள், வாலாஜா தாசில்தார் நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News