உள்ளூர் செய்திகள்

பைக் திருடிய வாலிபர் கைது

Published On 2022-12-03 08:55 GMT   |   Update On 2022-12-03 08:55 GMT
  • வாகன தணிக்கையின் போது சிக்கினார்
  • பைக் பறிமுதல்

சோளிங்கர்:

சோளிங்கரை அடுத்த வங்கப் பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 38). இவர் கடந்த 30-ந் தேதி உடல்நிலை சரியில்லாததால் சோளிங்கர் அரசு மருத் துவமனைக்கு பைக்கில் சென்றார். சிகிச்சைக்கு பின்னர் வெளியே வந்தபோது அவரது பைக் காணவில்லை.

இதுகுறித்து அவர் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று சோளிங்கர் அடுத்த பில் லாஞ்சி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கல்மேல் குப்பத்தைச் சேர்ந்த யூசப் (40) என்ப வரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் சோளிங்க ரில் ராஜாவின் பைக்கை திருடியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News