உள்ளூர் செய்திகள் (District)
- பழமையான புளியமரம் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயில் இருப்பதால் தண்ணீர் செல்லும்போது அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாயும் அபாயம் இருந்தது.
- இதையடுத்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி 8-வது வார்டு வேடப்பட்டி செல்லும் சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயில் இருப்பதால் தண்ணீர் செல்லும்போது அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாயும் அபாயம் இருந்தது. இதையடுத்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஆர்.டி.ஓ. உத்தரவின் படி நேற்று வருவாய்த்து றை மற்றும் நகராட்சி அதிகாரிகளால் அந்த புளியமரம் அகற்றப்ப ட்டது.