சின்னமனூர் அருகே நெடுஞ்சாலையோர டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் -பொதுமக்கள் வலியுறுத்தல்
- சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
- இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் தெரிவித்தனா்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த எரசக்கநாயக்கனூா், சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைக ளில் மது அருந்திவிட்டு வரும் குடிமகன்களால் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகி ன்றனா்.
இது தவிர தினமும் மது போதையில் வாகனங்களை இயக்குவோரால் விபத்து க்கள் ஏற்படுவதுடன், பல இடங்களில் தகராறிலும் ஈடுபடுகின்றனா்.
இதனால் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக தெரிவிக்கி ன்றனா்.
இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி யும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் இந்த மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.