உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட கூலி தொழிலாளர்கள்.

கூலி தொழிலாளர்கள் சாலை மறியல்

Published On 2023-02-10 08:06 GMT   |   Update On 2023-02-10 08:06 GMT
  • அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்.
  • அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளிகளுக்கு அனைத்து கட்டிடங்கள் சம்பந்தமான வேலைகளும் வழங்கப்படுவதால் கட்டிடத் தொழிலையே வாழ்வாதாரமாக உள்ள தமிழகத்தைச் சார்ந்த கொத்தனார், ஆசாரிகள், பெயிண்டர்கள் உள்ளிட்ட கட்டிட தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இங்குள்ள கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று 100 மேற்பட்ட பெண்கள் உட்பட 300 கட்டிட தொழிலாளிகள் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள சேர்மன்வாடி பகுதியில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News