உள்ளூர் செய்திகள்

வன்மீகநாதர் கோவிலில் ருத்ர ஹோமம் நடந்தது.

வன்மீகநாதர் கோவிலில் ருத்ர ஹோமம்

Published On 2023-04-01 09:13 GMT   |   Update On 2023-04-01 09:13 GMT
  • பல்வேறு பொருட்களை கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
  • பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி சோமகலாம்பாள் சமேத வன்மீகநாத சுவாமி கோயிலில் உலக நன்மையை கருதி ருத்ர ஹோமம் நடைபெற்றது.

அம்பாள் மற்றும் மூலவர் சன்னதி எதிரில் யாக சாலை அமைக்கப்பட்டு பல்வேறு பொருட்களை கொண்டு மந்திரம் சொல்லி யாகம்வளர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூலவருக்கும் அம்பாளுக்கும் பல்வேறு திரவங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

உலக மக்கள் நன்மைக்காக நடத்தப்பட்ட இந்த யாகத்திலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News