உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதிகளை மேம்படுத்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கை

Published On 2023-07-06 10:02 GMT   |   Update On 2023-07-06 10:02 GMT
  • குடியிருப்புகள் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும்.
  • பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு புதிய தாக வீடுகள் கட்டித்தர வேண்டும்.

அரூர், 

தருமபுரி மாவட்டம், அரூரில் தூய்மைப் பணியாளர்களுக்கான கண்காணிப்பு குழுவின் 2-ம் காலாண்டு ஆய்வுக் கூட்டம், கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் பேசுகையில், அரூர் பேரூரா ட்சிக்கு உள்பட்ட சுடுகாடு மேட்டில் தூய்மைப் பணி யாளர்களின் குடியிப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகள் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும்.

இந்த குடியிருப்பு பகுதியில் குடிநீர், தெரு விளக்குகள், சிமெண்ட் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள குடியிரு ப்புகளில் தூய்மைப் பணியா ளர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.

எனவே அரூர், கம்பை நல்லூர், கடத்தூர், பொ.மல்லா புரம், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு புதிய தாக வீடுகள் கட்டித்தர வேண்டும்.

தூய்மைப் பணி யாளர்களின் குழந்தை களுக்கு கல்விக் கடன்கள், சிறு தொழில் கடன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதில் வட்டாட்சியர்கள் பெருமாள், வள்ளி, தனி வட்டாட்சியர்கள் மில்லர், சின்னா, தூய்மைப் பணியாளர்களின் சங்க பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News