உள்ளூர் செய்திகள் (District)

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்

Published On 2023-11-30 10:20 GMT   |   Update On 2023-11-30 10:20 GMT
விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும்

வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

தருமபுரி பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்ப டுத்தப்படும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் மலைவேம்பு, தேக்கு, வேம்பு மற்றும் பூவரசு மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் இலவசமாக விவசாயிகளுக்கு விநியோ கிக்கப்பட உள்ளது.

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் மூலம் கிடைக்கப்பெறும் நீரினை பயன்படுத்தி பயன் தரும் மரக்கன்றுகளை நட்டு சுலபமாக பராமரித்திடலாம். நூறு சதவீத மானியத்தில் மரக்கன்றுகளை பெற ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், கணினி சிட்டா மற்றும் அடங்கல் நகல் புகைப்படம் ஒன்று.

இந்த ஆவணங்களை வழங்கி தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் பதிவு செய்து கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News