உள்ளூர் செய்திகள்

மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம்

Published On 2024-08-28 06:07 GMT   |   Update On 2024-08-28 06:07 GMT
  • மேக கூட்டங்கள் சிவப்பு நிறங்களில் காட்சி அளித்தது.
  • பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது. இதனால் சுமார் 7 மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சூரியன் மறையும் போது மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.

ஒரு சில இடங்களில் சூரியன் மறையும் நேரத்தில் மேக கூட்டங்கள் சிவப்பு நிறம் மற்றும் பல்வேறு நிறங்களில் காட்சி அளித்தது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சி கோட்டை மலைப்பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மேக கூட்டங்களில் சிவலிங்கம் தோன்றுவது போன்று காட்சியளித்தது.

நேரம் செல்ல, செல்ல சிவப்பு நிறத்தின் நடுவே சிவலிங்கம் இருப்பது போல் தனியாக தோன்றியது. இதனை கண்ட பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர். வானில் சிவபெருமான் தோன்றி காட்சி அளித்து வருகிறார் என ஒருவருக்கொருவர் பேசி கொண்டனர்.

இந்த காட்சியை அந்த பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டனர். மேக மூட்டங்களில் சிவலிங்கம் தோன்றிய காட்சியை அந்த பகுதிகளில் உள்ள மக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்கள் அந்த படத்தை பார்த்து சிவன் நேரில் தோன்றியது போன்றே காட்சியளிக்கிறது.

மேலும் பனிலிங்கத்தை காண்பது போன்று காட்சியும் மனதில் தோன்றுகிறது என ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News