உள்ளூர் செய்திகள் (District)

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-01-23 06:57 GMT   |   Update On 2023-01-23 06:57 GMT
  • வேள்விகால பூஜை மற்றும் கோவிலுக்குள் விநாயகர் வைத்தல் நடைபெற்றது.
  • கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பெருமாநல்லூர் :

திருப்பூர் பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் கிராமத்தில் உள்ள புதுப்பாளையம் எஸ்.ஆர்.நகர் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9.15 மணிக்கு நடைெபற்றது.

கும்பாபிஷேக விழாைவ முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதல்கால வேள்விகால பூஜை மற்றும் கோவிலுக்குள் விநாயகர் வைத்தல் நடைபெற்றது.

இன்று காலை 7.20 மணி அளவில் இரண்டாம் கால வேள்வி, காலை 9.20 மணிக்கு கும்பாபிஷேகமும் அதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News