உள்ளூர் செய்திகள்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.54.40 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

Published On 2023-03-01 14:03 GMT   |   Update On 2023-03-01 14:03 GMT
  • அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
  • 32 கிராம் தங்கம், 3 கிலோ 430 கிராம் வெள்ளி யை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரிகள் சோ.செந்தில்குமார், மாதவன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், ரூ.54 லட்சத்து 40 ஆயிரத்து 097 ரொக்கம், 32 கிராம் தங்கம், 3 கிலோ 430 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள்  காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News