உள்ளூர் செய்திகள்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.53.33 லட்சம் காணிக்கை வசூல்

Published On 2022-12-24 11:05 GMT   |   Update On 2022-12-24 11:05 GMT
  • உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
  • 6 கிலோ 39 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. ரூ.53 லட்சத்து 33 ஆயிரத்து 781 ரொக்கம், 7 கிராம் 500 மில்லி கிராம் தங்கம், 6 கிலோ 39 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News