உள்ளூர் செய்திகள் (District)

சிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்கள் 144 தடை உத்தரவு

Published On 2023-10-21 03:00 GMT   |   Update On 2023-10-21 03:00 GMT
  • அக்டோபர் 27-ந்தேதி காளையார் கோவிலில் மருது பாண்டியர் குருபூஜை
  • அக்டோபர் 31-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை 9 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்த என அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 27-ந்தேதி காளையார் கோவிலில் மருது பாண்டியர் குருபூஜை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 31-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடக்கிறது.

Tags:    

Similar News