உள்ளூர் செய்திகள்
குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்
- குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
- இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 34 இரண்டு மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஏலம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இருசக்கர வாகனத்திற்கு விலையை நிர்ணயித்து ஏலம் தொடங்கியது.
இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று ஏலம் எடுத்தனர். அதிகபட்ச விலையை கேட்கும் நபருக்கு வாகனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.