உள்ளூர் செய்திகள் (District)

தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சி பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிக்கு உணவு ஊட்டிய போது எடுத்தபடம்.

தேவகோட்டை நகராட்சி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம்

Published On 2023-08-28 05:30 GMT   |   Update On 2023-08-28 05:30 GMT
  • தேவகோட்டை நகராட்சி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டது.
  • நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் 6 நகராட்சி பள்ளிகள் உள் ளன. இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 167 பேர் பயின்று வருகின்றனர். தமிழக அரசு முதலமைச் சரின் காலை உணவு திட் டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தேவகோட்டை நகராட்சியில் ஜீவா நகரில் உள்ள ஒருங்கி–ணைந்த சமையல் கூடத்தில் இருந்து உணவுகள் நகராட்சி பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்லப்பட்டது. 16-வது நகர்மன்ற தொடக் கப்பள்ளியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்றத் துணைத் தலை–வர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி ஆகியோர் முதல்–மைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத் தனர். நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து அருகில் உள்ள மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந் தினார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News