உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள்

Published On 2022-07-29 09:12 GMT   |   Update On 2022-07-29 09:12 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
  • இதற்கான சிறப்பு முகாம்கள் 2-ந் தேதி தொடங்குகிறது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவி த்திறனற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை ஆலிம்கோ என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த சிறப்பு முகாமானது கீழ்கண்டவாறு, வட்டாரந்தோறும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. 2-ந் தேதி திருப்பத்தூரிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும், 4-ந் தேதி மானாமதுரை யிலும், 5-ந் தேதி திருப்புவ னத்திலும், 6-ந் தேதி இளையான்குடியிலும், 10-ந் தேதி தேவகோட்டையிலும், 11-ந் தேதி கண்ணங்கு டியிலும், 12-ந் தேதி சாக்கோட்டையிலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதூரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கையிலும் நடைபெற உள்ளது.

இதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2, ஆதார் அட்டை அல்லது வயதினை உறுதி செய்யும் ஏதாவது அங்கிகரிக்கப்பட்ட அடையாள சான்று மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் வழங்கிய வருமானச்சான்று அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான ரேசன் கார்டு அல்லது மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை அல்லது இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை, தேசிய சமூகநல உதவித்திட்ட அடையாள அட்டை அல்லது வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை அல்லது மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மிகாமல் வருவாய்த்துறை அலுவலர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட வருமானச்சான்று மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாம் நாட்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News