உள்ளூர் செய்திகள் (District)

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்த கணவன்-மனைவி

Published On 2023-06-10 09:45 GMT   |   Update On 2023-06-10 09:45 GMT
  • மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து கணவன்-மனைவி காயமடைந்தனர்.
  • சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிவகங்கை

சிவகங்கை நேரு பஜார் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி செண்பகதேவி. இருவரும் மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் மாடு குறுக்கே வந்தது. அப்போது இருசக்கர வாகனம் மாடு மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இளையான்குடி தகியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சுகாசினி. இருவரும் காரில் கால் குளம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரோட்டோ ரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

இதில் சுகாசினி படுகாய மடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News