மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் அறிவுரை வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தின் செயல்பா டுகள் குறித்து, கூடுதல் முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தனர். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கி நிர்வாக ஆணையர் பிரபாகர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு கோரிக்கை மனுக்களில் எளிதில் உடனடியாக தீர்க்கக்கூடிய மனுக்கள் உள்ளன. அந்த மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் விரைந்து பயன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறை களைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவ வேண்டும்.
தனித்துறையின் மூலம் செய்யக்கூடிய பணிகளை விரைந்து முடித்திடவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி கால தாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடவும் வேண்டும். பட்டா வேண்டி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை முறையாக கள ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடி க்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் குறைகளை தீர்ப்பது அரசு அலுவலர்கள் ஒவ்வொ ருவரின் கடமையாகும்.
அரசு அலுவலர்கள் தங்களிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணியாற்றும் போது, பெரும்பாலான பொது மக்களின் கோரிக்கை களுக்கு எளிதில் தீர்வு காண வழிவகை ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.