உள்ளூர் செய்திகள் (District)

2-ம் நிலை காவலர் தேர்வு பயிற்சி

Published On 2023-08-22 07:46 GMT   |   Update On 2023-08-22 07:46 GMT
  • சிவகங்கையில் 2-ம் நிலை காவலர் தேர்வு பயிற்சி வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.
  • இத்தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 17-ந்தேதி கடைசி நாளாகும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியத் தால் 2-ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ் நாடு சிறப்பு காவல்படை) 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 359 காலிப்பணி யிடங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந்தேதி முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 17-ந்தேதி கடைசி நாளாகும். இணைய வழி விண்ணப்பம் செய்ய www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க பயன்படுத்தி கொள்ளவும்.

இலவச பயிற்சி வகுப்பு களில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் போட்டி தேர்வு களுக்கு தயாராகும் இளைஞர்கள் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News