உள்ளூர் செய்திகள்

தேவகோட்டையில் 29-ந் தேதி மின்தடை

Published On 2023-05-27 07:44 GMT   |   Update On 2023-05-27 07:44 GMT
  • வருகிற 29-ந் தேதி தேவகோட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
  • மேற்கண்ட தகவலை தேவகோட்டை உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக கண்ணங்குடி, கப்பலுார், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், கே.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை தேவகோட்டை உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News