உள்ளூர் செய்திகள் (District)
- தேவகோட்டையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந்தினார்.
தேவகோட்டை
தேவகோட்டை நகராட்சியில் 6 நகராட்சி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மாணவ மாணவிகள் 167 பேர் பயின்று வருகின்றனர். இங்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.16-வது நகர்மன்ற தொடக்கப் பள்ளியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து அருகில் உள்ள மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந்தினார்.