உள்ளூர் செய்திகள்

தமிழக கபடி அணிக்கு மாணவர் தேர்வு

Published On 2023-10-05 08:49 GMT   |   Update On 2023-10-05 08:49 GMT
  • தமிழக கபடி அணிக்கு விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
  • மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே உள்ள ஆ.தெக்கூர் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல் நிலைப்பள்ளி மாணவர் அன்புச்செல்வன் கபடிப் போட்டியில் தமிழக அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

இவர் கடந்த மாதம் மானாமதுரையில் மண்டல அளவில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட கபடிப் போட்டியிலும், மாவட்ட அளவில் நடந்த போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால் தமிழக அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜன், பள்ளிச் செயலர் சேது, மாணவனின் வெற்றிக்கு சிறந்த பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் சமயகருப்பன் மற்று மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News