உள்ளூர் செய்திகள்

கால்நடை தீவனப்புல்

தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு வாங்க மானியம்

Published On 2022-11-13 07:47 GMT   |   Update On 2022-11-13 07:47 GMT
  • கால்நடைகளுக்கு தேவையான தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு வாங்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் கூறினார்.
  • கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தேவைப்படும தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறனைகள் வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறனைகள் வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் கால்நடை உதவி மருத்து வரிடம் பரிந்துரை பெற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறனைகளுடன் தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானிய தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பயனாளிகள் https:/ /application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியின பயனாளிகள் https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News