உள்ளூர் செய்திகள் (District)

திருமேனி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-04 08:17 GMT   |   Update On 2023-06-04 08:17 GMT
  • திருமேனி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல்புதூர் கிராமத்தில் உள்ள திருமேனி கருப்பர் மின்னஞ்செட்டி காளியாத்தாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மூன்று நாட்கள் 4 கால பூஜைகள் நடந்தது. இதில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி மற்றும் தீப ஆராதனை நடந்தது. பின்னர் நமசிவாய சிவாச்சாரியார் குழுவினர் தலைமையில் யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி விமானத்தில் ஏறி சென்று கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேலச்சுவபுரி, தேனிப்பட்டி, கீழசேவல்பட்டி, ஓ.சிறுவயல், நாச்சியாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வைரவன் கோவில் பிள்ளையார்பட்டி வகுப்பு நகரத்தார்கள் மற்றும் விழா குழு நிர்வாகிகள் தலைவர் நாகப்பன், செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News