உள்ளூர் செய்திகள் (District)

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் பாரம்பரிய நடவு திருவிழா

Published On 2023-10-17 07:55 GMT   |   Update On 2023-10-17 07:55 GMT
  • சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி சார்பில் பாரம்பரிய நடவு திருவிழா நடந்தது.
  • 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் கழணி மரபுவழி உழ வர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் நடவு திருவிழா, இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா என முப்பெரும் விழா எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் நடைப்பெற்றது.

விழாவில் ஊராட்சி தலை வர் அஜிதா நமச்சிவா யம் வரவேற்றார். சேதுபாஸ் கரா கல்விக் குழுமத் தலை வர் முனைவர் சேதுகுமணன் தலைமை தாங்கி, பாரம்பரிய நெல் நடவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

மேலும் கிராமப்புற மக்களுக்கு இயற்கை விவசாய பயிற்சிகள் மற்றும் உதவிகள் தம் கல்லூரியின் மூலமாக தொடர்ந்து வழங் கப்படும் என்றும், பால் மதிப்புக்கூட்டுதல், சந்தைப் படுத்துதல் மற்றும் பால் கூட்டுறவு சங்கம் பதி விற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

கல்லல் வட்டார வேளாண்மை இணை இயக் குநர் அழரோஜா, இயற்கை வேளாண்மையில் அரசு திட்டங்கள் குறித்து விளக்கி னார். சேதுபாஸ்கரா கல் லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் கருப்புராஜ் இயற்கை வேளாண்மை இடுப்பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார்.

குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய மருத்துவர் ரோமகிருஷ்ணன், கால்நடை களின் முக்கியத்து வம் மற்றும் அரசுத்திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் உழவியல் பேராசி ரியர் முனைவர் விமலேந்தி ரன் கலந்துக் கொண்டு விவசாயிகளுக்கு, வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், மண்வளம், நீர் பரிசோதனை குறிந்து விளக்கினார். இவ்விழாவில் 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவர் அர்ஜூன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News