உள்ளூர் செய்திகள் (District)
5 கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து ஆசி வழங்கிய வடநாட்டு சாமியார்
- 5 கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து வடநாட்டு சாமியார் ஆசி வழங்கினார்.
- பெயர் சொல்ல மறுத்து அவர் ஆங்கிலத்தில் பேசினார்.
மானாமதுரை
இமாச்சல பிரதேசம் கேதார்நாத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு செல்ல சாமியார் ஒருவர் மானாமதுரைஅருகே உள்ள கீழடி 4 வழிச்சாலையில் நடைபயணமாக வந்தார்.
அவர் கழுத்தில் 5 கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசியும், இடையில் சிறிய துண்டும் அணிந்து கையில் திரிசூலம், உடுக்கை உள்ளிட்டவற்றுடன் காணப்பட்டார்.
ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். கேதார்நாத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட இவர் தினமும் காலை 4 மணியில் இருந்து 12 மணி வரை நடப்பது அதன்பின் ஓய்வு எடுப்பதுமாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
பெயர் சொல்ல மறுத்து அவர் ஆங்கிலத்தில் பேசினார். மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தி விட்டு திருச்சி செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.