உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். அருகில் தமிழரசி எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.

187 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-10-13 08:25 GMT   |   Update On 2022-10-13 08:25 GMT
  • திருப்புவனம் அருகே பொட்டபாளையத்தில் 187 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • இந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பொட்டபாளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி அரசின் பல்வேறு துறை சார்பில் 187 பயனாளிகளுக்கு ரூ. 42.07 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் இடங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அதில் மருத்துவ முகாம்கள், கால்நடை முகாம்கள், வேளாண் பொருட்கள் சார்ந்த கண்காட்சிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மக்கள் தொடர்பு முகாமை நடத்திட அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

இந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News