உள்ளூர் செய்திகள் (District)

கோவில் திருவிழாவில் பூத்தட்டு எடுத்து வந்த பெண்கள்

Published On 2023-04-20 08:09 GMT   |   Update On 2023-04-20 08:09 GMT
  • கோவில் திருவிழாவில் பூத்தட்டை பெண்கள் எடுத்து வந்தனர்.
  • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திருப்பத்தூர் ரோட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பூத்தட்டு எடுத்து பெண்கள் வழிபாடு செய்தனர். முதல் நாளான நேற்று சித்தர் முத்துவடுகநாத சுவாமி கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர்.

காளியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருகிற 25-ந் தேதி பால்குடம், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News