உள்ளூர் செய்திகள் (District)

கருத்தரங்கில் விருந்தினரை பள்ளி, கல்லூரி நிர்வாக இயக்குனர் குடியரசு பொன்னாடை அணிவித்து வரவேற்ற‌ார்.

சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2023-03-20 09:27 GMT   |   Update On 2023-03-20 09:27 GMT
  • முதியோர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதித்து நடத்தல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பேசினார்.
  • முன்னதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.

தரங்கம்பாடி:

செம்பனார்கோயில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புதுச்சேரி ஓய்வு பெற்ற காவல்துறை கண்கா ணிப்பாளர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வரதட்ச ணை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை இளம்பெ ண்கள் பலாத்காரம்,முதி யோர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதித்து நடத்தல் போன்ற பல்வேறு கருத்து க்கள் குறித்து விரிவாக பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர், செயலர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News