உள்ளூர் செய்திகள் (District)

வீரமணி

மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் கைது

Published On 2023-10-12 09:37 GMT   |   Update On 2023-10-12 09:37 GMT
  • ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் அரிவாளால் மனைவி கிருபாவை வெட்டினார்.
  • ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 35) இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவ ருக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆன நிலையில் கிருபா(30) என்ற மனைவியும் 4 மற்றும் 2வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில் ராணுவ வீரரான வீரமணி ராணுவ பணிக்கு சென்றுவிட்டு விடுமுறையில் ஊர் வந்து செல்வதுண்டு.

இந்தநிலையில் கடந்த ஒரு மதத்திற்கு முன்பு விடுமுறை வந்திருந்து வீட்டில் இருந்த ராணுவ வீரர் வீரமணிக்கும் அவரது மனைவி கிருபாவிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் அரிவாளால் மனைவி கிரு பாவை சரமாரியாக வெட்டினார்.

அப்போது இதனை தடுத்த கிருபாவிற்கு இருகைகள் மற்றும் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உறவினர்கள் கிருபாவை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருபா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News