உள்ளூர் செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-07-03 09:59 GMT   |   Update On 2022-07-03 09:59 GMT
  • தலைஞாயிறு வட்டார மருத்துவர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் 650 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
  • கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது .முகாமிற்கு தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

மாநில விவசாய ஆலோ சனை குழு உறுப்பினர் தலைஞாயிறு ஒன்றிய தி.மு.க செயலாளர் மகாகுமார் முன்னிலை வகித்தார். தலைஞாயிறு வட்டார மருத்துவர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் 650 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

முகாமில் கள்ளிமேடு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், தாமரைப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா பாலசுந்தரம், நீர்முளை ஒன்றியகுழு உறுப்பினர் செல்வி சேவியர், மாவட்ட பிரதிநிதி மச்சயழகன், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News