உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவர்கள்.

மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு சீர்காழி பள்ளி மாணவர்கள் தேர்வு

Published On 2023-01-21 08:58 GMT   |   Update On 2023-01-21 08:58 GMT
  • 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கனிகா தேர்வு.
  • மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டிக்கு 11-ம் வகுப்பு மாணவி ஷமீனராகவி தகுதி.

சீர்காழி:

தமிழ்நாடு மாநில அளவிலான குடியரசு மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியானது கம்பு சண்டை, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு என அனைத்து வயது பிரிவினருக்கும் இப்போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கு 13 மாணவ, மாணவிகள் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியிலிருந்து தகுதி பெற்றுள்ளனர். 6-ம் வகுப்பு மாணவி யாழினி, 7-ம் வகுப்பு மாணவி யுவேத்திதா, 9-ம் வகுப்பு மாணவி தீபிகா,

கீர்த்தனா , 11-ம் வகுப்பு மாணவி ஷாமிலி, 12-ம் வகுப்பு மாணவி கனிகா, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரிஷிகாந்த், ஆதவன், நீசார்தின் 9-ம் வகுப்பு மாணவன் சபரிநாதன் மற்றும்

10-ம் வகுப்பு மாணவர்கள் அஜய், சிவப்பிரவின் ஆகியோர்கள் சிலம்பம் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டிக்கு 11-ம் வகுப்பு மாணவி ஷமீனராகவி தகுதி பெற்றுள்ளார்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் வரதராஜன், துளசிரங்கன், மேலும் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் மேலும் பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிர மணியன், பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், பள்ளி குழு தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News