உள்ளூர் செய்திகள் (District)
- தருமபுரி அருகே ஆண் சிசு திடீர் என்று உயிரிழந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பாக்கியம் (வயது 19) என்பவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தவகோட்டை அடுத்த சுந்தரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கடந்த அக்டோபர் 20-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று தாய் பாக்கியம் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். குழந்தை பிறந்து இரண்டு மாதத்தில் இருந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.