உள்ளூர் செய்திகள் (District)

ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஐசியூ-வில் நடிகர் ரஜினிகாந்த்

Published On 2024-10-01 05:16 GMT   |   Update On 2024-10-01 09:13 GMT
  • ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பிற்கு ஆஞ்சியோ சிகிச்சை.
  • 24 மணி நேரம் ஐசியூ பிரிவில் இருப்பார் எனத் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செரிமானம் பிரச்சனை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும்வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

பின்னர் அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதாக தகவல் வெளியானது. 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான அதிநவீன ஆஞ்சியோதெரபி சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் அவருக்கு ஆஞ்சியோபிஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

24 மணி நேரம் ஐசியூ-வில் இருப்பார். அதன்பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் நடிகர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News