உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் சூப்பிரண்ட் ஆய்வு

Published On 2023-11-15 09:38 GMT   |   Update On 2023-11-15 09:38 GMT
  • தொடர் மழை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • போலீஸ் சூப்பிரண்டு கள ஆய்வில் ஈடுப்பட்டார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற நிலையில் வெள்ள அபாயத்திலிருந்து பொது மக்களை காப்பாற்ற நாகை மாவட்ட காவல்துறையின் சார்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுஅறிவுறுத்தலின்படி மீட்பு பணிகள் மேற்கொள்ள காவல்துறையினரைக் கொண்டு பேரிடர் மீட்புக் குழு அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீட்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா என நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.

அவசர உதவிக்கு உங்கள் நாகை போலீஸ் சூப்பிரண்ட்யிடம் பேசுங்கள் என 84281 03090 என்ற எண்ணையும் வெளியிட்டார். 

Tags:    

Similar News