உள்ளூர் செய்திகள் (District)

ஓமலூர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கிராமம் கிராமமாக சென்று ஆலோசனை

Published On 2022-08-16 08:58 GMT   |   Update On 2022-08-16 08:58 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கிராமம் கிராம மாக சென்று கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
  • இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கிராமம் கிராம மாக சென்று கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஓமலூர் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது நிர்வாகிகள் பேசுகையில், அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒ.பன்னீர்செல்வம் தான் நிரந்தர ஒருங்கி ணைப்பாளர். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயல லிதா. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியில் துரோகம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதை ஒ.பி.எஸ். சட்ட ரீதியாக பார்த்துகொள்வார்.

ஒ.பி.எஸ் என்ன சொல்கிறாரோ அதை செய்வோம். அ.தி.மு.கவின் தொண்டர்கள் எப்போது ஒ.பி.எஸ். பக்கமே உள்ளனர். இதனை நிருபிக்கும் வகையில் ஓமலூர் தொகுதியில் ஒவ்வொரு கிராமமாக கூட்டம் நடத்தப்படும். விரைவில் கட்சி தொண்டர்களை ஒ.பி.எஸ். சந்திக்கும் வகையில் மிகப்பெரிய பொதுகூட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News