உள்ளூர் செய்திகள் (District)

திண்டுக்கல் அருகே விவசாயி தோட்டத்தில் முளைத்த 2 கிலோ எடையுள்ள காளான்

Published On 2024-10-27 08:21 GMT   |   Update On 2024-10-27 08:21 GMT
  • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
  • காளானை வேரோடு பறித்து வீட்டிற்கு சமையலுக்கு எடுத்துச் சென்றனர்.

வடமதுரை:

மழை காலத்தில் இடி, மின்னல் அடிக்கும் போது காளான் முளைப்பதுண்டு. கிராமப்புறங்களில் இந்த காளான்களை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வழக்கம் நகர் புறங்களிலும் தொடரவே செயற்கை முறையில் காளான்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

காளான்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் உடலில் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக ஆய்வுகள் கூறிவரும் நிலையில் இதன் மீதான ஆர்வமும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. செங்குளத்துப்பட்டியில் உள்ள சுந்தர மகாலட்சுமி என்பவரது தோட்டத்தில் இன்று காலை 2 கிலோ எடையுள்ள மிகப்பெரிய காளான் முளைத்திருந்ததை அவரது மகன் கவின் பார்த்தார்.

இதுகுறித்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரவவே அந்த காளானை ஆர்வத்துடன் வந்து பார்த்தனர். பின்னர் அந்த காளானை வேரோடு பறித்து வீட்டிற்கு சமையலுக்கு எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News