ஒரகடம் அருகே பஸ் கவிழ்ந்து 23 தொழிலாளர்கள் காயம்
- வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லம் சிப்காட்டில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு பணியாற்றும் 20 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை பஸ் நேற்று மாலை வண்டலுார்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்றது. ஒரகடம் அருகே பஸ் சென்ற போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. 23 பேர் படுகாயம்
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பெண் தொழிலாளர்கள், டிரைவர் உள்ளிட்ட 3 ஆண்கள் என மொத்தம் 23 பேர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.