உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்தால் கடும் நடவடிக்கை

Published On 2023-12-23 09:36 GMT   |   Update On 2023-12-23 09:36 GMT
  • கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
  • கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொன்னேரி:

பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மீஞ்சூரை அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து வல்லூர் சந்திப்பில் இருந்து மணலி, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சரக்கு பெட்டக வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி வழித்தடத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது மக்களின் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் துறைமுகம் நோக்கி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்கு வரத்து நெரிசல் குறையும். சாலை யோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அதிவேகமாகவும், சாகசங்கள் செய்தபடியும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் சாலை தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஓட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News