உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க-பா.ஜனதா சடுகுடு

Published On 2023-11-11 08:12 GMT   |   Update On 2023-11-11 08:12 GMT
  • விடாதே பிடி. விட்டதை பிடி என்பது போல் போட்டி நிலவுகிறது.
  • மாவட்ட வாரியாக பலர் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க., பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே விடாதே பிடி. விட்டதை பிடி என்பது போல் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த போது அ.தி.மு.க.வில் சேர்ந்த பலர் பா.ஜனதாவில் சேர்க்கப்பட்டார்கள். இப்போது அப்படி சேர்ந்தவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.

மாவட்ட வாரியாக பலர் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு அ.தி.மு.க.வுக்கு செல்பவர்களை விடாதே பிடி என்ற ரீதியில் அண்ணாமலையும் செயல்பட்டு வருகிறார். ரகசியமாக கண்காணித்து அ.தி.மு.க.வுக்கு செல்லும் எண்ணத்தில் இருப்பவர்களை தடுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவ்வாறு தடுக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் சூர்ய சிவா.

Tags:    

Similar News