உள்ளூர் செய்திகள் (District)
அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு- ஆவணங்கள் சமர்ப்பிப்பு
- எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் அ.தி.மு.க. தெரியப்படுத்தியுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்குகள் கடந்த 28-ந்தேதி அன்று நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்வு ஆனதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் அ.தி.மு.க. தெரியப்படுத்தியுள்ளது.