உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ். வேட்பாளர்களின் மனு ஏற்புக்கு எதிர்ப்பு: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க. கடிதம்

Published On 2023-04-22 03:49 GMT   |   Update On 2023-04-22 07:18 GMT
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
  • இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

சென்னை:

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வருகிற மே மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெங்களூரு புலிகேசி தொகுதியில் அ.தி.மு.க. தரப்பில் அன்பரசன் போட்டியிடுவதாக அறிவித்தார்.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளராக நெடுஞ்செழியன், காந்தி நகர் தொகுதியில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இவர்கள் மூவரும் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் மனுவை ஏற்றுள்ளார் எனவும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News