உள்ளூர் செய்திகள்

50 அடி உயரத்தில் குறுகிய படிக்கட்டு மூலம் இறங்கி வரும் யானை.

யானையை 50 அடி உயரத்தில் இருந்து ஆபத்தான முறையில் படிக்கட்டு வழியாக இறக்கும் பாகன்

Published On 2022-10-02 10:25 GMT   |   Update On 2022-10-02 10:25 GMT
  • புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
  • இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது.

புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானை, இரவு நேரத்தில் கன்னியாகுமரி பார்க்வியூ பஜாரில் உள்ள கடைவீதி வழியாக கோவிலுக்கு அழைத்து வரப்படும் போது 50 அடி உயரத்தில் இருந்து குறுகிய படிக்கட்டு வழியாக பாகனால் இறக்கப்படும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

இந்த திகில் காட்சி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News