உள்ளூர் செய்திகள் (District)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்தது

Published On 2023-05-23 04:18 GMT   |   Update On 2023-05-23 04:18 GMT
  • குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.57 அடியாக உள்ளது.
  • பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.52 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.66 அடியாக உள்ளது.

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.79 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,066 கன அடி தண்ணீர் வருகிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.57 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.52 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.66 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

Tags:    

Similar News