உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே கார்களில் குட்கா, புகையிலை கடத்திய 5 பேர் கைது

Published On 2022-10-05 09:16 GMT   |   Update On 2022-10-05 09:16 GMT
  • சோழவரம் அருகே உள்ள செம்புலிவரம், செங்காளம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனை.
  • 3 கார்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

செங்குன்றம்:

சோழவரம் அருகே உள்ள செம்புலிவரம், செங்காளம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து வந்த 3 கார்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக சந்திராராம், நாராயன்லால், ஜெயபால், கணேசன், தங்க மாரியப்பன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 95 ஆயிரம் ரொக்கம், 100 கிலோ புகையிலை பொருட்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களுடன் தொடர்பில் உள்ள குட்கா கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News