உள்ளூர் செய்திகள் (District)

திருவள்ளூர் அருகே குடிநீரில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-11-11 06:57 GMT   |   Update On 2023-11-11 06:57 GMT
  • மப்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
  • கிராம மக்கள் நோய் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் மப்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் இந்த கிராம மக்கள் நோய் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீருடன் கழிவுநீர் திறந்து விடப்படுவதை கண்டித்து அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மப்பேடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News