உள்ளூர் செய்திகள்

சேலையூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-30 09:15 GMT   |   Update On 2022-08-30 09:15 GMT
  • உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முதியவர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று இருந்தார்.
  • முதியவர் தொடர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.

சேலையூர்:

சேலையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மனோகரன்(வயது64). உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று இருந்தார். மேலும் அவர், தொடர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் உள்ள ஜன்னலில் மனோகரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News