உள்ளூர் செய்திகள்
பேத்தி தற்கொலை செய்ததால் அதிர்ச்சியில் உயிரைவிட்ட தாத்தா
- பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தாத்தாவும் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.
- பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கோவிலூர் தெருவை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 50). பைக் மெக்கானிக்.
இவரது மகள் ஹாசினி (15). இவர் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஹாசினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
பேத்தியின் தற்கொலையால் தாத்தா சுப்பிரமணியன் (75 ) சோகத்துடன் காணப்பட்டார். பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.
பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்ததால் அந்த பகுதி மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.