குருவாயல் கிராமத்தில் மல்லிகை பூச்செடிக்கு மருந்து அடித்த இளம் பெண் மயங்கி விழுந்து பலி
- தனலட்சுமியின் கணவர் விநாயகமூர்த்தி நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(வயது35). இவர் தனது வாயலில் உள்ள மல்லிகை பூச்செடிக்கு நேற்று முன்தினம் காலை பில்லு மருந்து அடித்தார்.இதனால் திடீரென மயங்கி விழுந்தார்.
எனவே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தனலட்சுமியின் கணவர் விநாயகமூர்த்தி நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.